உள்ளூர் செய்திகள்
பகண்டைகூட்ரோடு அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
- பகண்டைகூட்ரோடு அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மையனுாரில் சாராயம் விற்ற பிச்சை(39), அதேபோல் தொண்டனந்தலில் சாராயம் விற்ற ராஜசேகர் மனைவி செல்வி(30) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.