உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-09-30 14:47 IST   |   Update On 2023-09-30 14:47:00 IST
  • திருச்சி சங்கிலியாண்டபுரம்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
  • உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

 திருச்சி 

திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் வள்ளுவன் (வயது 45 ). இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 நாட்களாக வீட்டில் இருந்தார். .தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த வள்ளுவன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வள்ளுவன் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு கம்பியில் வேஷ்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது மகன் உதய பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News