உள்ளூர் செய்திகள்

திருச்சியில் ரூ.1000 வாங்கிய குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி

Published On 2023-09-15 07:21 GMT   |   Update On 2023-09-15 07:21 GMT
  • திருச்சியில் ரூ.1000 வாங்கிய குடும்ப தலைவிகள்
  • சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படு கிறது.

திருச்சி, 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது குடும்ப தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

அதன்படி 2023- 24 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அந்த திட்டத்தி ற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிறப்பு முகாம்கள் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் தகுதியான விண்ண ப்பங்கள் தேர்வு செய்யப்ப ட்டன.

தற்போது இந்த திட்ட த்தில் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அண்ணா பிறந்த நாளான இன்று காஞ்சிபுர த்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதா னத்தில் உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை தொ டங்கி வைப்பதாக முதலமை ச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று ள்ளது.

தமிழகத்தில் பெரும்பா லான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.

திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவி விஜயலட்சுமி கூறும்போது,

எனது கணவர் மரக்க டையில் மாதம் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலை செய்கிறார். வாடகை வீட்டில் இருக்கிறோம். மாத வாடகையாக ரூ. 3000 கொடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மகன் பத்தாம் வகுப்பு, இன்னொரு மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறா ர்கள். நான் எந்த வேலை க்கும் செல்லாமல் குழந்தைக ளை பராமரித்து வருகிறேன்.

சில நேரங்களில் குழந்தை களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்குவதற்கு கூட கையில் பணம் இருக்காது.

கலைஞர் உரிமை த்தொகை என்னை போன்று வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும்.

சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படு கிறது. முதலமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

திருச்சி முத்தரசநல்லூர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி நதியா,

நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு எனது வங்கி கணக்குக்கு ரூ. 1000 வந்தது. அதை பார்த்ததும் சந்தோ ஷமாக இருந்தது.

எனது மகளின் எதிர்கால தேவைக்கு இனிமேல் இந்த கலைஞர் உரிமைத் தொகையை சேமிக்கலாம் என இருக்கிறேன். முதலமை ச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

Tags:    

Similar News