உள்ளூர் செய்திகள்

சரக்கு வாகனம் மோதி விவசாயி பரிதாப சாவு

Published On 2023-10-20 06:11 GMT   |   Update On 2023-10-20 06:11 GMT
துறையூர் அருகே சரக்கு வாகனம் மோதி விவசாயி பரிதாப சாவு

துறையூர் 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை நாகலாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையை கடக்க முயன்றார்.

அப்பொழுது அந்த வழியாக அரியலூர் மாவட்டம் ஓரியூர் கிராமத்தை சேர்ந்த வினோத் (35) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக சக்திவேலின் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சக்திவேலின் மகள் மகாலட்சுமி (32) என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், டிரைவர் வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துறையூர் அருகே சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News