உள்ளூர் செய்திகள்
சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15.47 லட்சம் தங்கம் பறிமுதல்
- திருச்சி விமான நிலையத்தில்சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15.47 லட்சம் தங்கம்
- அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி
திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர் துபாய் ஓட்டு நாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருகின்றனர் இதனை சுங்கத்துரோகி அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில்நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 15. 47 லட்சம் மதிப்புள்ள 260 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.