உள்ளூர் செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பைப் திருடிய ஆசாமி கைது

Published On 2023-09-29 14:40 IST   |   Update On 2023-09-29 14:40:00 IST
  • திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பைப் திருட்டு
  • பைப் திருடிய ஆசாமி கைது

திருச்சி.

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறுவை சிகிச்சை வார்டில் கை கழுவும் அறையில் இருந்த குழாயை மர்ம ஆசாமி ஒருவர் திருடிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பது தெரிய வந்தது.இதை தொடர்ந்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார் கைது செய்தனர்.


Tags:    

Similar News