உள்ளூர் செய்திகள்
திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
- உக்கிர மாகாளியம்மன் கோவிலில் நான்காவது ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடை பெற்றது.
- இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி,
திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவிலில் நான்காவது ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று 1008 திருவிளக்கு பூஜை,சுமங்கலி பூஜை மற்றும் குபேர லட்சுமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிளக்கு பூஜையில் பங்கேற்பதால் வீட்டில் வறுமை கடன் நீங்க பெற்று செல்வம் பெருகும். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை தென்னூர் தெய்வீக மகா சபை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.