உள்ளூர் செய்திகள்

மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் தப்பி ஓட்டம்

Published On 2023-04-19 09:23 GMT   |   Update On 2023-04-19 09:23 GMT
  • மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் தப்பி ஓடி விட்டார்
  • மணல் திருடப்பட்டு வருவதாக காட்டுப்புத்தூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மேல காரைக்காடு பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார்.

தொட்டியம்:

தொட்டியம் அருகே மேலக்காரைக்காடு பகுதியில் காவிரி ஆற்றும் மணல் திருடப்பட்டு வருவதாக காட்டுப்புத்தூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மேல காரைக்காடு பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக பதிவு எண் இல்லாத ஒரு இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை ஏற்றி வந்தவர், போலீசாரை கண்டதும், இருசக்கர வாகனம் மற்றும் மணல் மூட்டைகளை விட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து இரு சக்கர வாகனம் மற்றும் மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் எம்.புத்துரை சேர்ந்த ராசுபிள்ளை மகன் வினோத்குமார்(20) என்பது தெரிய வந்தது. காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய வினோத்குமாரை தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News