உள்ளூர் செய்திகள்

திருச்சியில் இளம்பெண் தற்கொலை

Published On 2023-08-31 13:48 IST   |   Update On 2023-08-31 13:48:00 IST
  • திருச்சியில் கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
  • உடலை கைப்பற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி, 

திருச்சி ஏர்போர்ட் காம ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பைரல். இவரது மனைவி மணிமேகலை (வயது 36). இவர் கடந்த சில ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த தலையில் சுய உதவி குழு பெண்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கினார். அதனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான மணிமேகலை எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News