உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 படித்து வந்த மாணவி தற்கொலை

Published On 2022-06-18 14:59 IST   |   Update On 2022-06-18 14:59:00 IST
  • பிளஸ்-1 படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
  • தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருச்சி :

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் கள்ளர் தெருவை சேர்ந்தவர் சாந்தி . இவரது கீர்த்தனா( வயது 16) இவர் ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கீர்த்தனா அவருடைய தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தாயார் சாந்தி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

Tags:    

Similar News