உள்ளூர் செய்திகள்
கல்லூரிக்கு செல்வதாக சென்ற மாணவர் மாயம்
- கல்லூரிக்கு செல்வதாக சென்ற மாணவர் மாயமானார்
- வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை
திருச்சி :
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரன் நகர் செட்டியாபட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர்(46). இவரின் மகன் விக்னேஷ்(16). இவர் அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு புறப்பட்டு சென்ற அவர்
அதன்பின் திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் எடமலைப்பட்டிபுதூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் விக்னேசைதேடி வருகின்றனர்.