உள்ளூர் செய்திகள்

திருவிழாவில் கத்திக்குத்து

Published On 2023-06-20 07:59 GMT   |   Update On 2023-06-20 07:59 GMT
  • துறையூர் அருகே கோவில் திருவிழாவில் கத்திக்குத்து
  • 2 பேர் கைது, 2 பேர் தலைமறைவு

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயிவிலில் தற்சமயம் திருவிழா நடைபெற்று வருவதால், அப்பகுதியை சேர்ந்த ஒரு சில நபர்கள் அம்மனுக்கு சிறப்பு செய்வதற்காக ஊர்வலம் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினரான அரவிந்த் (வயது20), சங்கர் (18), ஆனந்த் (21), ராபின் (22) ஆகிய நான்கு பேரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஊர் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் நான்கு இளைஞர்களும் சேர்ந்து கூட்டத்தில் இருந்த வெங்கடேசன் (23), கார்த்திக் (23) ஆகிய இரு இளைஞர்களை கட்டையால் அடித்து காயப்படுத்தியதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசனை குத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கிராம தலைவர் தமிழ்ச்செல்வன் துறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், அரவிந்த், சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டு பின்னர் தலைமறைவான ஆனந்த், ராபின் ஆகிய இருவரையும் துறையூர் போலீசார் தேடி வருகின்றனர். துறையூர் அருகே கோயில் திருவிழாவில் கத்திக்குத்து நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News