உள்ளூர் செய்திகள்
திருச்சி தபால் அலுவலகத்தில் பணம் கொள்ளை
- போஸ்ட் மாஸ்டராக சுனந்தா(51) என்பவர் பணியாற்றி வருகிறார்.
- மறுநாள் காலை வந்து பார்த்தபொழுது போஸ்ட் ஆபீஸின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
திருச்சி,
திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியில் தபால் அலுவலகம் உள்ளது உள்ளது. இங்கு போஸ்ட் மாஸ்டராக சுனந்தா(51) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று இருக்கிறார். மறுநாள் காலை வந்து பார்த்தபொழுது போஸ்ட் ஆபீஸின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாலக்கரை காவல் நிலையத்தில் அவர் அளித்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில் போஸ்ட் ஆபீஸில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் செல்போன் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.