உள்ளூர் செய்திகள்

துப்பாக்கியுடன் ரவுடி கைது

Published On 2023-10-10 12:39 IST   |   Update On 2023-10-10 12:39:00 IST
  • திருவெறும்பூர் அருகே துப்பாக்கியுடன் ரவுடி கைது செய்யப்பட்டு உள்ளார்
  • துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் அருகே உள்ள காருண்யா நகர் பகுதியில் திருவெறும்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அந்த பகுதியில் சந்தேக படும்படியாக நின்றுகொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர், திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த பொந்துளி மகன் முருகானந்தம் (எ) மூல முருகானந்தம் ( வயது 28) என்பது தெரிய வந்தது. அவரை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி கைப்பற்ற பட்டது.இந்த நாட்டுத்துப்பாக்கிக்கு அவர் உரிய வகையில் லைசன்ஸ் பெறவில்லை என்பதும் தெரிய வந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் முருகானந்தத்தின் மீது திருவெறும்பூர், பொன்மலை, நவல்பட்டு, புதுக்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ள ரவுடி என்பதும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து இதனை தொடர்ந்து ரவுடி முருகானந்தத்தை கைது செய்த, திருவெறும்பூர் போலீசார், அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து, திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சியில் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News