உள்ளூர் செய்திகள்
பேன்சி கடை உரிமையாளரின் வாகனம் திருட்டு
- திருச்சி தெப்பக்குளத்தில் பேன்சி கடை உரிமையாளரின் வாகனம் திருட்டு போனது
- கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
திருச்சி,
திருச்சி மேலசிந்தாமணி கரூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது (வயது 38). இவர் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தெப்பக்குளம் தேவாலயம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்த பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். பின்னர் நூர் முகமது இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.