உள்ளூர் செய்திகள்

துறையூரில் லாட்டரி விற்றவர் கைது

Published On 2023-11-19 12:09 IST   |   Update On 2023-11-19 12:09:00 IST
  • திருச்சி மாவட்டம் துறையூரில் லாட்டரி விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்கு மாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • இதனையடுத்து வெள்ளையனை பிடித்து தனிப்படை போலீசார் துறையூர் காவல் நிலை யத்தில் ஒப்ப டைத்தனர்.

துறையூர்

திருச்சி மாவட்டம் துறையூரில் லாட்டரி விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்கு மாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து எஸ்.பி-யின் தனிப்படை போலீசார் துறையூர்-அம்மாபட்டி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தே கத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசார ணை செய்ததில்,அவர் அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் (47) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ப னை செய்து கொண்டி ருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து வெள்ளையனை பிடித்து தனிப்படை போலீசார் துறையூர் காவல் நிலை யத்தில் ஒப்ப டைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் வெள்ளையனை கைது செ ய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்ற பணம் ரூ.180 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News