உள்ளூர் செய்திகள்

கடத்தல் ஆசாமியை 2 கி.மீ. தூரம் துரத்தி பிடித்த சுங்கத்துறையினர்

Published On 2023-08-19 12:07 IST   |   Update On 2023-08-19 12:07:00 IST
  • திருச்சி விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை 2 கி.மீ. தூரம் துரத்தி பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்
  • பிடிபட்டவரின் பார்சலில் இருந்து ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்

கே.கே.நகர், 

துபாயிலிருந்து நேற்று திருச்சி வந்த விமான பயணிகளை வான் நுண்ணறி பிரிவு சுங்கத்துறையினர் சோதனைக்கு பின்னர் வெளியேற அனுமதித்தனர். அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் தங்களது உடைமைகளை 5 அட்டை பெட்டிகளில் பிரித்து அதனை கார்கோ பிரிவில் அனுப்பி வைத்துவிட்டு திருச்சி விமான நிலையத்தில் பெற்று கொள்ள சென்ற போது அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்களது பொருட்களை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது உடமைகளின் மீது துகள் வடிவில் தங்கம் பூசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக முற்பட்ட போது அந்த இரு நபர்களில் ஒருவர் முனைய வளாகத்தில் இருந்து தப்பி ஓடினார். இதனை கண்ட வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரை சினிமா பாணியில் விரட்டிச் சென்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் துரத்தலுக்கு பின்னர் அவர் சுங்கத்துறையினரிடம் பிடிபட்டார். அவரை விமான நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அந்த பயணிகள் இருவரும் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களிடமிருந்து சுமார் 920 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது எனவும் இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55 .20 லட்சம் என தெரிய வருகிறது

Tags:    

Similar News