உள்ளூர் செய்திகள்

திருச்சியில் பள்ளி மாணவி காரில் கடத்தல் - 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

Published On 2022-09-08 08:57 GMT   |   Update On 2022-09-08 08:58 GMT
  • சின்னையன். மகள் ஊட்டத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
  • சதீஷ் மற்றும் நான்கு பேர் கூட்டாக மாணவியை காரில் கடத்திச் சென்ற தகவல் தெரிய வந்தது.

திருச்சி.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஊட்டத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது 16 வயது மகள் ஊட்டத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பெற்றோர் பல்வேறு இடங்களில் மகளை தேடி அலைந்தனர். இந்த நிலையில் ஊட்டத்தூர் பெட்ரோல் பங்க் அருகாமையில் ஊட்டத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் சதீஷ் மற்றும் நான்கு பேர் கூட்டாக அந்த மாணவியை காரில் கடத்திச் சென்ற தகவல் தெரிய வந்தது.

இதில் சதீஷ் அந்த மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே அவர் நண்பர்கள் உதவியுடன் காதலியை திருமணம் செய்ய கடத்திச் சென்று இருக்கலாம் என கூறப்பட்டது. இது தொடர்பாக சின்னையன் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார்.

அதில் கடத்தப்பட்ட தனது மகளை மீட்டு தருமாறு கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிளஸ்-1 மாணவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News