உள்ளூர் செய்திகள்

திருச்சி மாவட்டத்தில்3-வது நாளாக பரவலாக மழை

Published On 2023-10-17 14:45 IST   |   Update On 2023-10-17 14:45:00 IST
  • திருச்சி மாவட்டத்தில் மழை
  • 3-வது நாளாக பரவலாக மழை


திருச்சி


திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.


நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக துறையூர் தாலுகா தென்பரநாடு பகுதியில் 67 மில்லி மீட்டர், மணப்பாறை தாலுகா பொன்னணியாறு அணைக்கட்டு பகுதியில் 44.6, மருங்காபுரி பகுதியில் 41.6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.


மேலும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு வருமாறு;-


கல்லக்குடி 18.2, லால்குடி 2.2, நந்தியாறு அணை 28.2 புள்ளம்பாடி 36, தேவி மங்கலம் 3.2, சமயபுரம் 10.6, சிறுகுடி 16.8, வாத்தலை அணைக்கட்டு 2.4, மணப்பாறை 13.2, கோவில்பட்டி 10.3, முசிறி 11.3, புலிவலம் 8, தாப்பேட்டை 26, நவலூர் கொட்டப்பட்டு 1.5, துவாக்குடி 13, கொப்பம்பட்டி 24, துறையூர் 6, பொன்மலை 2.2, திருச்சி ஏர்போர்ட் 13, திருச்சி ஜங்ஷன் 2.4, திருச்சி டவுன் 1.4 மி.மீ என மொத்தம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 403.1 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 16.8 மழை அளவு பதிவாகி உள்ளது.


தொடர் மழையின் காரணமாக திருச்சி மாநகரில் சாலைகள் அனைத்தும் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.




Tags:    

Similar News