அவமானப்படுத்திய மகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை
- திருச்சி அருகே காதல் திருமணம் செய்த மகள் அவமானப்படுத்தியதால் கழுத்து நெரித்து கொன்ற தந்தை
- கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்
தா.பேட்டை,
திருச்சி தா.பேட்டை அருகே உள்ள ஊரகரையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகள் பிரியங்கா (வயது 21).இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தா.பேட்டை அருகே தேரப்ப ம்பட்டி வனப்பகுதியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அருகில் விஷ பாட்டில் மற்றும் அவரது கைப்பை கிடந்தது.இது பற்றி தகவல் அறிந்த ஜம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து பிரியங்கா உடலை மீட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் விசாரணை நடத்தினார்.பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கொலை செய்யப்ப ட்ட பிரியங்கா பிளஸ் 2 வரை படித்திருந்தார்.கடந்த 6 மாதத்திற்கு முன்பு மகாதேவி பகுதியைச் சேர்ந்த சீனு பிரசாத் என்ற வாலிபரை காதலித்து திரும ணம் செய்தார். ஆனால் அவருடன் சரியாக குடும்பம் நடத்தாமல் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.கைதுஇந்த நிலையில் கொலை நடந்திருப்பதால் அது ஆணவ கொலையாக இருக்கலாம் என்ற சந்தே கத்தின் அடிப்ப டையில் அவரது தந்தை அறிவழகனை பிடித்து கிடுக்கு பிடி விசார ணை நடத்தினர்.இதில் மகளை கொலை செய்ததை அறிவழகன் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து போலீசார் அவரை இன்று கைது செய்தனர்.கைதான அறிவழகன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில்,எனது மகள் பிரியங்கா திருமணமான பின்னரும் கணவருடன் சேர்ந்து வசிக்காமல் எங்கள் வீட்டுக்கு வந்தார். அது மட்டுமல்லாமல் எனது உறவினர்களிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தார். இது எனக்கு அவமானமாக இருந்தது.இந்த நிலையில் சம்பவ த்தன்று பிரியங்கா என்னி டம் ரூ.5000 பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து உறவினர் ஒருவரிடம் பணம் வாங்கித் தருவதாக ஏமாற்றி பைக்கில் அழைத்து சென்றேன்.பின்னர் காட்டுப்பகுதி யில் மகளை இழுத்துச் சென்று துப்ப ட்டாவில் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டுக்கு வந்தேன்.வழக்கை திசை திருப்பு வதற்காக விஷ பாட்டில் ஒன்றை அவரது உடல் அரு காமையில் போட்டுவிட்டு வந்தேன் என கூறியுள்ளார். புதுப்பெண் கொலையில் தந்தை கைது செய்யப்ப ட்டுள்ள சம்பவம் தாப்பே ட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.