உள்ளூர் செய்திகள்

திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு

Published On 2023-08-27 09:11 GMT   |   Update On 2023-08-27 09:11 GMT
  • திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு ஏழு மையகளில் நடைபெற்றது
  • மொத்தம் 6,095 பேர் தேர்வு எழுதினர்

திருச்சி,

சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களுக்கான எழுத்துத்ேதர்வு திருச்சி மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 7,402 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இந்த முதல் கட்ட தேர்வில் திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்து இருந்த 7 ஆயிரத்து 402 பேரில் ஆண்கள் 4,555 பேரும், பெண்கள் 1,540 பேர் என மொத்தம் 6,095 பேர் தேர்வு எழுதினர். இதில் 961 ஆண்கள், 346 பெண்கள் என மொத்தம் 1,307 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தேர்வு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார். 

Tags:    

Similar News