உள்ளூர் செய்திகள்

செல்போனை தந்தை பறித்ததால் மகள் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-11-10 15:11 IST   |   Update On 2022-11-10 15:11:00 IST
  • சுவாதி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வந்தார்.
  • அடிக்கடி செல்போனில் யாரிடமாவது பேசிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எசனைகோரை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் சுவாதி (வயது 20). இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே வேலை முடிந்து வீடு திரும்பினாலும் சுவாதி எப்போதும் செல்போனும் கையுமாக இருந்துள்ளார். மேலும் அடிக்கடி செல்போனில் யாரிடமாவது பேசிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தையான முருகானந்தம் கவனித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் மகள் எல்லை மீறி போவதாக எண்ணிய தந்தை முருகானந்தம் மகளை கண்டித்ததோடு அவர் வைத்திருந்த செல்போனையும் பறித்து விட்டார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த சுவாதி யாரிடமும் பேசாமல் அழுதுகொண்டே இருந்தார். உறவினர்கள் தேற்றியும் அவர் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று வீட்டில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கினார். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் சுவாதி பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News