உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-09-19 13:19 IST   |   Update On 2023-09-19 13:19:00 IST
  • மண்ணச்சநல்லூர் அருகே கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
  • காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு

திருச்சி,

திருச்சி மணச்சநல்லூர் கரியமாணிக்கம் தழுதாள ப்பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வடி வேல் (வயது 50). கூலித் தொழிலாளி.இவரது மகன் நவீன் குமார் ( 17). இவர் முசிறியில் உள்ள ஒரு தனியார் இன்ஜி னியரிங் கல்லூரியில் டிப்ள மோ மெக்கானிக்கல் இன்ஜி னியரிங் 3-ம் ஆண்டு படி த்து வந்தார்.பெற்றோர் சொற்ப வரு மானத்தை கொண்டு அவரி ன் கல்வி செலவுகளை சமா ளிக்க முடியாமல் தடுமாறி வந்தனர். அதைத்தொடர்ந்து நவீன் குமார் தனது கல்லூரி விடுமுறை நாட்களில் கட் டிட வேலைக்கு சென்று வந்தார்.அப்போது கொப்பவாளி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும், நவீன் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காத லாக மாறியது.

இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். படி க்க வேண்டிய காலத்தில் பாதை மாறினால் மகனின் எதிர்காலம் கேள்விக்கு றியாகி விடுமே என கவலை அடைந்தனர்.

இதையடுத்து காதலை கைவிடுமாறு நவீன் குமாரை அவரது தந்தை வடிவேல் கண்டித்தார். ஆனால் காத லியை நொடிப் பொழுதில் அவரால் மறக்க இயல வில்லை.மேலும் காதலியை சந்தி க்கவும் இயலவில்லை. இதனால் மிகுந்த மன அழு த்தத்திற்கு ஆளான நவீன் குமார் தழுதாளப்பட்டி அய்யனார் கோவில் அருகா மையில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார்.இதுகுறித்து அவரது தந்தை வடிவேல் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News