உள்ளூர் செய்திகள்

வழிபறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் மீது வழக்கு

Published On 2023-05-26 07:17 GMT   |   Update On 2023-05-26 07:17 GMT
  • வழிபறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
  • போலீசார் 2 சிறுவர்களை திருச்சி இபி ரோட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

திருச்சி,

திருச்சி கருமண்டபம் ஜே.ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48). இவர் அந்த பகுதியில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர், திருச்சி மத்திய பஸ் நிலையம் டவுன் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது இவர் அருகில் வந்த திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் 2 பேர் தாமோதரன் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 300 பணத்தை திருடிக் கொண்டு ஓட முயன்றனர். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் அந்த சிறுவர்களை பிடித்து திருச்சி கண்டோன்மென்ட் குற்ற பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் 2 சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு திருச்சி இபி ரோட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.



Tags:    

Similar News