உள்ளூர் செய்திகள்

வட மாநில வாலிபர்கள் மீது தாக்குதல்

Published On 2023-10-10 12:54 IST   |   Update On 2023-10-10 12:54:00 IST
  • திருச்சி பாலக்கரை பகுதியில் வட மாநில வாலிபர்கள் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது
  • மனைவியுடன் பேசியதால் கணவர் வெறிச்செயல்

திருச்சி,

பீகார் மாநிலம் சேபுரா மாவட்டம் பதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு குமார் (வயது 33).இவரது சகோதரர் பப்லு (33).இவர்கள் இருவரும் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அண்ணா நகர் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கம்பெனியில் சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த பரணிதரன் (26) மனைவி தாமரைச்செல்வியும் பணியாற்றி வருகிறார்.இந்த கம்பெனியில் மேஸ்திரியாக செயல்படும் பப்பு குமார் தாமரைச்செல்வி இடம் வேலை விஷயமாக பேசுவது வழக்கமானது. இது கணவர் பரணிதரனுக்கு பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து பரணிதரன் தனது நண்பர் பாண்டியராஜன் உடன் அங்குள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார். பின்னர் செல்போன் மூலம் பப்பு குமாரை அங்கு தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி அவரது கழுத்தில் கத்தியால் கீறி உள்ளனர். இதை அறிந்த அவரது சகோதரர் பப்லு அங்கு சென்றார்.பின்னர் அவரையும் பரணிதரன் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பப்பு குமார் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர்.தப்பி ஓடிய பரணிதத்தை தேடி வருகின்றனர். விசாரணையில் பரணிதரன் மனைவியுடன் கருத்து வேறுபாட்டில் இருந்ததும், மனைவி வேலைக்கு செல்வதை நிறுத்த பப்பு குமாரை கத்தியால் குத்தியதும் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News