உள்ளூர் செய்திகள்

மாடிபடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

Published On 2022-12-15 10:05 GMT   |   Update On 2022-12-15 10:05 GMT
  • மாடிபடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்
  • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

திருச்சி:

திருச்சி தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல். சாப்ட்வேர் இன்ஜினியர். சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன் உள்ளார். இவரது தந்தை சீனிவாசன் (வயது59.).இவர் புத்தூர் பாரதி நகரில் உள்ள வீட்டில் இருந்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்துவிட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News