உள்ளூர் செய்திகள்

அகில இந்திய கபடி இறுதி போட்டி

Published On 2023-09-03 12:03 IST   |   Update On 2023-09-03 12:03:00 IST
  • அகில இந்திய கபடி இறுதி போட்டி நடைபெற உள்ளது
  • மணப்பாறையில் இன்று மாலை நடக்கிறது

திருச்சி:

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவில்பட்டி சாலையில் உள்ள திடலில் அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் கடந்த 31-ந் ந தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதில் அரியானா, டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மும்பை, த கர்நாடகா, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார்60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இதேபோல் பல்வேறு துறைகளை சேர்ந்த அணிகளும், புகழ்பெற்ற கபடி வீரர்களும் பங்கேற் த றுள்ளனர். நேற்று காலை பெண்களுக்கான கபடி போட்டி டு விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஏராளமானவர்கள் போட்டியை கண்டு ரசித்தனர். இன்று காலை தொடங்கிய போட்டியின் தொடர்ச்சியாக காலிறுதிபோட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து இறுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்குகின்றனர்.

Tags:    

Similar News