உள்ளூர் செய்திகள்

முசிறியில் வேளாண்மை பயிற்சி பெறும் திட்டம் தொடக்கம்

Published On 2023-01-11 12:59 IST   |   Update On 2023-01-11 12:59:00 IST
  • முசிறியில் வேளாண்மை பயிற்சி பெறும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது
  • முகாமில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், எடுத்துரைக்கவும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என கல்லூரி மாணவிகள் கூறினர்.

முசிறி:

முசிறி வடுகப்பட்டியில் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பாக கிராமத்தில் தங்கி வேளாண் பயிற்சி பெறும் திட்டம் துவக்க விழா வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளங்கலை வேளாண் மாணவி யோகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். வேளாண் கல்லூரி முதல்வர் சேகர் முன்னிலை வகித்தார். நகர மன்ற தலைவர் கலைச்செல்வி, துணை தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்

. நிகழ்ச்சியில் முசிறி வேளாண் அலுவலர் பிரியங்கா, தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ், கிராம நிர்வாக அலுவலர் சௌந்தர்ராஜன், இணை பேராசிரியர் குணா, உதவி பேராசிரியர் கனகராஜ், உதவி பேராசிரியர் சீபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 75 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் முசிறி வட்டாரத்தில் உள்ள வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், எடுத்துரைக்கவும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என கல்லூரி மாணவிகள் கூறினர்.முடிவில் இளங்கலை வேளாண் மாணவி நந்திதா நன்றி கூறினார்.


Tags:    

Similar News