உள்ளூர் செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் கணவரை தவிக்க விட்டு புதுப்பெண் மாயம்

Published On 2023-09-06 15:14 IST   |   Update On 2023-09-06 15:14:00 IST
  • திருமணமான 3 மாதத்தில் கணவரை தவிக்க விட்டு புதுப்பெண் மாயமானார்
  • பெற்றோருக்கு பரபரப்பு கடிதம்

திருச்சி:

திருச்சி நாகமங்கலம் வி.ஏ டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 24). தனியார் நிறு வனத் தொழிலாளி. இவரு க்கும் புதுக்கோட்டை மாவ ட்டம் விராலிமலை குன்ன த்தூர் கோலாப்பட்டி பகுதி யைச் சேர்ந்த கிறிஸ்டி வின்ஸ்லெட் (21) என்பவரு க்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயி க்கப்பட்டு திருமணம் நட ந்தது.

இந்த திருமணத்தில் கிறி ஸ்டிக்கு விருப்பம் இல்லா மல் இருந்துள்ளது.ஆனால் பெற்றோர் கட்டாயப்படுத்தி அவரை திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

திடீர் மாயம் -கடிதம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுப்பெண் கிறிஸ்டி வின்ஸ்லெட் தனது கணவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இது பற்றி பன்னீர்செல்வம் அவ ரது மாமனாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த சகாய ரத்தினராஜ் தனது மகளை தேடி கண்டுபிடித்து தரு மாறு மணிகண்டம் போலீ சில் புகார் செய்தார்.

பின்னர் கிறிஸ்டி வின்ஸ் லெட் அறையில் போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு ஒரு கடிதம் கண்டெ டுக்கப்பட்டது.

அதில் கிறிஸ்டி வின்ஸ் லெட் தனது பெற்றோர்க ளுக்கு, என்னை கட்டாய ப்படுத்தி திருமணம் செய்து வைத்தீர்கள். எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் போகிறேன் என எழுதி இருந்தார்.

இதனால் அவர் காதல் வயப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

ஆனால் அவ்வாறு யாரையும் அவர் காதலிக்க வில்லை பெற்றோர் மறுத்து விட்டனர்.

இதுகுறித்து மணிகண்டம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3 மாதத்தில் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு புது ப்பெண் மாயமான சம்பவம் விராலிமலை மற்றும் மணி கண்டன் பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

Tags:    

Similar News