உள்ளூர் செய்திகள்

மதுவுக்கு அடிமையானவர் தற்கொலை

Published On 2023-03-31 15:01 IST   |   Update On 2023-03-31 15:01:00 IST
  • மதுவுக்கு அடிமையானவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • மன அழுத்தத்திற்கு ஆளானார்

திருச்சி:

திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி சின்ன நாராயண ஐயர் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன்(வயது 50) தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் குடிபோதை பழக்கத்தில் இருந்து அவரை மீட்டெடுப்பதற்காக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் மது அருந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான கிருபாகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது மனைவி மீனாட்சி கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News