உள்ளூர் செய்திகள்

முசிறி அருகே ரேஷன் கடை பெண் விற்பனையாளருக்கு வாலிபர் கொலை மிரட்டல்

Published On 2023-02-25 08:44 GMT   |   Update On 2023-02-25 08:44 GMT
  • முசிறி அருகே ரேஷன் கடை பெண் விற்பனையாளருக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
  • ரேஷன் பொருள்களுக்கு வரிசையில் நிற்கச் சொன்னதால் ஆத்திரம்

திருச்சி:

திருச்சி முசிறி காந்திநகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி பாமா (வயது 42). இவர் முசிறி அருகே நாச்சம்பட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

வழக்கம்போல அவர் ரேஷன் அட்டைதாரர்களை வரிசையில் நிற்க வைத்து அரிசி, பருப்பு, ஆயில் போன்ற பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நாச்சம்பட்டி குடித்தெரு பகுதியை சேர்ந்த குமார் (23) என்ற வாலிபர் ரேஷன் பொருட்கள் வாங்க வந்தார்.

அப்போது அவர் வரிசையில் நிற்பவர்களை புறந்தள்ளிவிட்டு தனக்கு உடனடியாக பொருட்கள் விநியோகிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. அதற்கு விற்பனையாளர் பாமா ஒப்பு கொள்ள மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த குமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாமா முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News