உள்ளூர் செய்திகள்

தேர் முன்பாக நடனம் ஆடுவதில் தகராறு

Published On 2023-05-11 08:09 GMT   |   Update On 2023-05-11 08:09 GMT
  • தனியாக சென்ற வாலிபர் மீது சரமாரி தாக்குதல்
  • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்

திருச்சி,

திருச்சி கல்லக்குடி ஆலம்பாக்கம் பகுதியில் உள்ள கோயிலில் தேர்பவனி நடைபெற்று உள்ளது. அப்போது தேரின் முன்பாக நடனம் ஆடுவது தொடர்பாக இளைஞர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு, வாக்கு வாதம் நடைபெற்று உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆலம்பாக்கம் மேலத்தெருவை சேர்ந்த அடைக்கலராஜ்(வயது 30) என்பவர், பஞ்சாயத்து அலுவலகம் பக்கம் சென்ற போது அதே பகுதியை சேர்ந்த எட்வின்(31), எடிசன்(27), சிம்சன்(26), பாரத்(25) ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அடைக்கலராஜ் பலத்த காயம் அடைந்து லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News