உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

போடியில் மரக்கன்று நடும்விழா

Published On 2023-07-13 10:55 IST   |   Update On 2023-07-13 10:55:00 IST
  • போடி அறிவுத்திருக்கோவில் அமைந்துள்ள சாலையில் தி கிரீன் லைப் பவுண்டேசன் சார்பில் செயலாளர் தலைமையிலும், நகர்மன்ற உறுப்பினர் முன்னிலையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
  • வேம்பு, வாதாம், சிவகுண்டலம், அதானி, இலுப்பை, நாவல், பூவரசு, குமிழ், வில்வம், பன்னீர் உள்ளிட்ட 18 மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலசொக்கநாதபுரம்:

போடி அறிவுத்திருக்கோவில் அமைந்துள்ள சாலையில் தி கிரீன் லைப் பவுண்டேசன் சார்பில் செயலாளர்சுந்தரம் தலைமையிலும், நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரி முன்னிலையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. அறிவுத்திருக்கோவில் நிர்வாகத் தலைவர்சிவராமன் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.

சில்லமரத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி வனிதா, ஆடிட்டர் மித்ராதேவி , அறிவுத்திருக்கோவில் செயலாளர் தயாளன், பொருளாளர் சந்திரன், திட்ட அலுவலர்சுகந்தி ,மக்கள் தொடர்பு அலுவலர் சங்கரேஸ்வரி, பசுமை பங்காளர் அமைப்பின் நிறுவனர் பனை முருகன், சீனிவாசா நகர் நலச்சங்க செயலாளர் ரவிச்சந்திரன், ராஜ்மோகன், காஞ்சனா, அனீஷ், சில்லை அஜித்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

இதில் தி கிரீன் லைப் பவுண்டேசன் உறுப்பினர்கள் சேகர், செந்தில்ராஜ், அர்ச்சுனன்,சந்திரசேகர், ஹரி கிருஷ்ண பாண்டியராஜ், உதயா ரத்தினம் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டனர். வேம்பு, வாதாம், சிவகுண்டலம், அதானி, இலுப்பை, நாவல், பூவரசு, குமிழ், வில்வம், பன்னீர் உள்ளிட்ட 18 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags:    

Similar News