உள்ளூர் செய்திகள்

வெற்றி வெற்ற மாணவர்களை பாராட்டிய காட்சி

தேசிய அளவிலான யோகா போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் வெற்றி

Published On 2023-04-05 08:53 GMT   |   Update On 2023-04-05 08:53 GMT
  • தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் நடத்திய தேசிய அளவிலான யோகா ஸ்போர்ட்ஸ் கிராண்ட் சாம்பியன்ஷிப்- 2023 -ல் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சான்றிதழ் மற்றும் சுழல் கோப்பை பெற்றனர்.

தென்காசி:

கரூர் அஜந்தா மஹாலில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் நடத்திய தேசிய அளவிலான யோகா ஸ்போர்ட்ஸ் கிராண்ட் சாம்பியன்ஷிப்- 2023 -ல் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர்கள் சாய் கணேஷ் மற்றும் முகிலன் முதலிடத்திலும், 4-ம் வகுப்பு மாணவன் தருண் பிரசாத், 5-ம் வகுப்பு மாணவன் முகமது அப்துல்லா மற்றும் 6-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன் 2-ம் இடத்திலும், 4-ம் வகுப்பு மாணவன் ஆபீக் 3-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் மற்றும் சுழல் கோப்பை பெற்றனர். தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News