உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

Published On 2023-03-31 09:05 GMT   |   Update On 2023-03-31 09:05 GMT
  • ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சங்கரன்கோவில் தாசில்தாராக ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 தாசில்தார்கள் வேறு இடங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டும், 2 துணை தாசில்தாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தாசில்தார்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி என்பவர் தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் சங்கரன்கோவில் மண்டல துணை தாசில்தாராக இருந்த ராணி பதவி உயர்வு பெற்று சங்கரன்கோவில் தாசில்தா ராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தென்காசி குடிமை பொருள் வழங்கல் தாசில்தாராக இருந்த கங்கா தற்போது தேர்தல் தாசில்தாராகவும், அதேபோல் மேலும் 3 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News