உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சாத்தான்குளம் பஜார் பகுதி.

சாத்தான்குளம் பஜாரில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி - நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை

Published On 2023-08-22 08:49 GMT   |   Update On 2023-08-22 08:49 GMT
  • சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் சாத்தான்குளம் பஜாரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிட தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
  • விதிமுறைகளை மீறி எதிரே வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் சாத்தான்குளம் பஜாரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிட தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் அரசு திட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக தாசில்தார் அலுவலகம், ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனர். இதனால் சாத்தான்குளம் பஜார் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

எனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வழிபாதை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதற்கென முறையான போக்குவரத்து போலீசார் நியமிககப்படா ததால் அது செயல்படாமல் உள்ளது. அரசு பஸ்கள், மினி பஸ்கள் முறையாக பயன்படுத்தினாலும், விதிமுறைகளை மீறி எதிரே வரும்லாரி உள்ளிட்ட வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

முகூர்த்த நாள், விழா காலங்களில் அதிக வாகனங்கள் பஜார் பகுதியில் வருவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது. எனவே இதனை தடுகக வாகனங்களை சாலை ஓரங்களிலும், ஒதுக்குப்பு றான இடங்க ளிலும் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியா பாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News