உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்கள் சென்னை திரும்பியதால் அணிவகுத்து நின்றன.

விக்கிரவாண்டி டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுப்பால் போக்குவரத்து நெரிசல்

Published On 2023-08-21 07:09 GMT   |   Update On 2023-08-21 07:09 GMT
  • 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது.
  • மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.

விழுப்புரம்:

சென்னை தலைநகரில் இருந்து மதுரை அ.தி.மு.க. மாநாடு மற்றும் விடு முறையை கழிக்க நேற்று முன்தினம் தென் மாவட்ட த்தை நோக்கி 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது. நேற்று மதுரை மாநாடு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் முதல் சென்னை நோக்கி வாகனங்கள் திரும்ப ஆரம்பித்தன.இதனால் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.தொடர்ந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டிருந்ததால் டோல் பிளாசா வில் கூடுதலாக 9 லைன்களை திறந்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். நேற்று இரவு வரை 39 ஆயிரம்வாகனங்கள் சென்னை திரும்பி சென்றது.

Tags:    

Similar News