உள்ளூர் செய்திகள்
- கே.மோட்டூர் வவ்வால்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர்.
- டிராக்டரை சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மண் இருந்தது , தெரிய வந்தது.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் போலீசார் கே.மோட்டூர் வவ்வால்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கேட்பாரற்று நின்ற ஒரு டிராக்டரை சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மண் இருந்ததும், அதை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.