உள்ளூர் செய்திகள்

பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் சாவு

Published On 2023-04-26 09:31 GMT   |   Update On 2023-04-26 09:31 GMT
  • ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக வண்டி கவிழ்ந்து விழுந்தது
  • தலையில் பலத்த காயம் அடைந்த இளங்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சடையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் இளங்கோ (வயது27).

விவசாயியான இவர் அரூரில் உள்ள பட்டறையில் தனது டிராக்டரை சர்வீசுக்காக விட்டிருந்தார்.

அதனை சரிசெய்து விட்டதாக அறிந்த இளங்கோ சம்பவத்தன்று டிராக்டரை எடுத்து கொண்டு அரூர்-சடையம்பட்டி சாலையில் இரவு நேரத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இருட்டில் அந்த பகுதியில் இருந்த ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக வண்டி கவிழ்ந்து விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இளங்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கோட்டப்பட்டி போலீசார் உடனே அங்கு வந்து இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News