உள்ளூர் செய்திகள்

அப்பர் பவானியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்

Published On 2022-12-03 10:26 GMT   |   Update On 2022-12-03 10:26 GMT
  • சூழல் சுற்றுலாவை ஏற்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • மான்கள், மற்றும் வன விலங்குகளை காண சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ள ஊட்டி, குன்னுார் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக மஞ்சூர் பகுதியில் உள்ள அப்பர்பவானி, பென்ஸ்டாக் காட்சிமுனை, குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி அணைக்கட்டுகள் மற்றும் நீர் மின் நிலையங்கள், அவலாஞ்சி மீன் வளர்ப்பு நிலையம் மற்றும் தமிழக கேரளா எல்லையில் உள்ள கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ெபரிதும் ஆர்வங்காட்டுகிறார்கள்.

குறிப்பாக மஞ்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ துாரம் உள்ள அப்பர்பவானி பகுதியில் இயற்கையோடு ஒன்றியுள்ள காடுகள், பச்சை பசேல் என கண்களுக்கு பசுமையூட்டும் புல்வெளிகள், மனதை கவரும் மடிப்பு மலைகள், மலைகளில் வெள்ளி கீற்றுகளாய் தவழும் அருவிகள், சாலையில் துள்ளி திரியும் மான்கள், மற்றும் வன விலங்குகளை காண சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

இது தவிர மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாகவும், மாவட்டத்தில் மிக பெரியதுமான மேல்ப வானி அணை உள்ளது. இந்நிலையில் எந்த தடையும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அப்பர்பவா னிக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வனத்துைற தடை விதித்துள்ளது.

இதற்காக அப்பர்பவானி ெசல்லும் சாைலயில் 10கி.மீ முன்பாக ேகாரகுந்தா என்ற இடத்தில் வனத்துைற சார்பில் ெசக்ேபாஸ்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பர்பவானிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் செக்போஸ்டில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.

இதனால் சுற்றுலா பயணிகள் அப்பர்பவானி யை பார்வையிட முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பர்பவானியில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிப்ப துடன் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலாவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

Tags:    

Similar News