உள்ளூர் செய்திகள்
தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை.
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை (5-ந்தேதி) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.