உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தீபக்ஜேக்கப்.

நாச்சியார்கோவிலில் நாளை, மக்கள் நேர்காணல் முகாம்- கலெக்டர் தகவல்

Published On 2023-05-31 10:09 GMT   |   Update On 2023-05-31 10:09 GMT
  • 1969-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
  • முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.

தஞ்சாவூா்:

தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் 1969-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News