உள்ளூர் செய்திகள்

அரசு தலைமை கொறடாவுடமான கோவி செழியன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் இன்று பழனி மலைக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

பழனி கோவிலில் இன்று சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஆய்வு

Published On 2023-09-01 06:16 GMT   |   Update On 2023-09-01 06:16 GMT
  • அரசு தலைமை கொறடா கோவி செழியன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் இன்று பழனி மலைக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
  • ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், பிரசாத ஸ்டால், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்

பழனி:
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-24-ம் ஆண்டிற்கான மனுக்கள் குழு தலைவரும், அரசு தலைமை கொறடாவுடமான கோவி செழியன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் இன்று பழனி மலைக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், பிரசாத ஸ்டால், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பா, கார்த்திகேயன், பாபு, பொன்னுச்சாமி, முத்துராஜா, சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் சட்டமன்ற மனுக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News