உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பாடப்புத்தகங்களில் பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவிக்க விழிப்புணர்வு வாசகங்கள்

Published On 2022-06-11 05:50 GMT   |   Update On 2022-06-11 05:50 GMT
  • பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வந்துள்ளன.
  • திருப்பூர் கல்வியாளர்கள், பெற்றோர் ,மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

திருப்பூர்,

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக மாணவிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.இதுபோன்ற சூழ்நிலையில் தங்கள் பிரச்சினையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் மாணவிகள் சில நேரங்களில் தங்கள் உயிரையும் மாய்த்து கொள்கின்றனர்.

புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வந்துள்ளன.

அதில் கல்வித்தகவல் மையம் எண் - 14417 'சைல்ட் லைன்' எனப்படும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் எண் - 1098 மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் பாடப்புத்தகங்களின் பின்புற அட்டையில் அச்சிடப்பட்டுள்ளன. இது திருப்பூர் கல்வியாளர்கள், பெற்றோர் ,மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News