உள்ளூர் செய்திகள்

நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

Published On 2023-10-21 06:29 GMT   |   Update On 2023-10-21 06:29 GMT
  • தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • உள்ளாட்சி தினத்தன்று அனைத்து கிராம சபைகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

சென்னை:

கிராமசபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (ஜனவரி 26), தொழிலாளர் நாள் (மே 1), இந்திய விடுதலை நாள், (ஆகஸ்டு 15) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய 6 சிறப்பு நாட்களின் போது தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தினத்தன்று அனைத்து கிராம சபைகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News