உள்ளூர் செய்திகள்
- உதவி கலெக்டர் விசாரணை
- தம்பதிக்கு குழந்தை இல்லை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த அழிவிடை தாங்கி கிராமத்சேதை ர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவரது மனைவி சுகன்யா (23). இருவரும் மாங்காடு கூட்ரோட்டில் உள்ள சிப்காட் ஷூ கம்பெனி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லை.
கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்து சுகன்யா தனது தாயார் வீடான வெங்களத்தூரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டின் அறையில் தூக்கு போட்டுக் தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த னர். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுகன்யா உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் உதவி கலெக்டர் அனாமிகா விசாரணை நடத்தி வருகிறார்.