உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

Published On 2023-01-21 13:56 IST   |   Update On 2023-01-21 13:56:00 IST
  • மரத்தில் தூக்கில் தொங்கினார்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

வெறையூர் அருகே உள்ள பவித்திரம் புதூர் பகுதியைச்சேர்ந்த வர் காசி (வயது 65), கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் அருகில்" இருந்த மரத்தில் காசி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வெறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News