உள்ளூர் செய்திகள்

418 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-10-27 15:41 IST   |   Update On 2022-10-27 15:41:00 IST
  • அம்பேத்குமார் எம்.எல்.ஏ.வழங்கினார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பெருங்கடப்புத்தூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மனுநீதி நாள் விழா நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அனாமிகா, தெள்ளார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் குமரன், ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி, வந்தவாசி தாசில்தார் முருகானந்தம், சமூக பாதுகாப்பு தாசில்தார் சுபாஷ் சந்தர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பெருங்கடப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ஆதிகேசவன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி அம்பேத்குமார் எம். எல். ஏ, கலந்துகொண்டு 418 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

விழாவில் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சுரேஷ்குமார், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன் பாபு,பரணிதரன், தேசூர் வருவாய் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் ஆசைத்தம்பி, சுகாதார ஆய்வாளர் கணேசன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, சுகாதா ரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சார்பாக அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளை பார்வையிட்டனர்.

Tags:    

Similar News