உள்ளூர் செய்திகள்

வேணுகோபால் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-04-24 06:40 GMT   |   Update On 2023-04-24 06:40 GMT
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
  • கிருஷ்ணர் வேடம் அணிந்த பக்தர் பஜனை பாடல்கள் பாடினார்

செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள வடதண்டலம் கிராமத்தில் ராதா ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ வேணுகோபால் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பட்டாச்சாரியார்கள் கலசங்களை சுமந்து கோவிலை வளம் வந்து கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டி கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.விழாவின்போது கிருஷ்ணர் வேடம் அணிந்த பக்தர் பஜனை பாடல்கள் பாடினார். ஒ.ஜோதி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே. சீனிவாசன், ஞானவேலு மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளர் கு.வெங்கடேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினரான ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பரசுராமன், முன்னாள் தலைவர்கள் ஆதி கேசவன், இந்திரகுமார் மற்றும் ஆதிமூலம் ஆகியோர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News