பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி முகாம்
- விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது
- 80 பேர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் கொரால்பாக்கம், கிராமத்தில் சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையம், மற்றும் கீழாநெல்லி வேளாண்மை அறிவியல் மையம், சார்பில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, உளுந்து பயிறு தொகுப்பு நிலை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க முகாம் நடந்தது.
முகாமில் வம்பன 8 ரக உளுந்து விதை பயன்படுத்துதல், விதை நேர்த்தி, உயிர் உரங்களின் பயன்பாடு, பேசில்லாஸ் பயன்படுத்தும் முறை, உர மேலாண்மை, ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 80 விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
முகாமில் வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப விஞ்ஞானி சுரேஷ், தொழில்நுட்ப வல்லுநர் ஐஸ்வர்யா, உதவி வேளாண்மை அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப அட்மா மேலாளர் சேகர், நன்றி கூறினார்.